ஏற்காடு இளங்கோ
மின் நூல் வெளியீடு : etamil.co.in
மேலட்டை உருவாக்கம் – லெனின் குருசாமி –guruleninn@gmail.com
என்னுரை
இந்தியாவில் உனக்குப் பிடித்த விஞ்ஞானி யார் என்று பள்ளிக்குழந்தைகளிடம் கேட்கும்போது அப்துல்கலாம் என்கின்றனர். 5 வயது குழந்தைகள் கூட அப்துல்கலாமின் பெயரைத் தெரிந்து வைத்துள்ளனர். அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல. அவர் இந்தியாவின் ஜனாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். சிறந்தப் பேச்சாளர், மனித நேயம் மிக்கவர், சுமூகப்பார்வைக்கொண்டவர். அவர் ஒரு எழுத்தாளரும் கூட. அத்துடன் அவர் பல கவிதைகளையும் எழுதியுள்ளார். அவர் பள்ளிக்குழந்தைகளை மிகவும் நேசித்தார். நாடு முழுவதும் சென்று மாணவர்களைச் சந்தித்தார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் மட்டுமே இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்கின்ற எண்ணம் கொண்டவராக இருந்தார். மாணவர்களைச் சந்திக்கும் போது அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார். அவை சிறந்த மேற்கோள்களாக விளங்குகின்றன.
இந்த புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு E. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப் புத்தகத்தை பிழைதிருத்தம் செய்து கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு S. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த செல்வி ந.மு.கார்த்திகா அவர்களுக்கும் எனது நன்றி. இந்த புத்தகத்தை மின்னூலாக வெளியிட்ட etamil.co.in மிற்கும் எனது நன்றியைத் தெவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துகளுடன்
ஏற்காடு இளங்கோ